நல்லொழுக்கம்

Tuesday, May 30, 2006

விவரங்கள்

வலைப்பதிவர் பெயர்: நன்மனம்

வலைப்பூ பெயர் : நல்லொழுக்கம்

சுட்டி(url) : nalozukkam.blogspot.com

ஊர்: படித்தது, பிடித்தது சென்னை, (தற்போது இருப்பது பக்கு)

நாடு: இந்தியா. (தற்போது இருப்பது அஜெர்பைஜான்)

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பர் தேகலீசன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 25 மே, 2006

இது எத்தனையாவது பதிவு: மூன்றாவது

இப்பதிவின் சுட்டி(url): nalozukkam.blogspot.com/2006/05/114897626718485102.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: நான் கண்ட/கேட்ட நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள.

சந்தித்த அனுபவங்கள்: பின்னூட்ட அனுபவங்கள் சில.

பெற்ற நண்பர்கள்: பல நல்ல உள்ளங்கள்.

கற்றவை: கைமண் அளவு

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அறிய காத்திருக்கிறேன்

இனி செய்ய நினைப்பவை: நல்ல விஷயங்களை பகிர்வதை தொடர்வது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: பலரை போல், "யார் நீ" என்ற கேள்விக்கு பதில் தேடி கொண்டிருக்கும் "மனிதன்"

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: நண்பர்களே!!புன்னகை ஒரு அருமையான ஆயுதம் அதை கொண்டு பல யுத்தங்களை வெல்ல முடியும். புன்னகையை தினமும் பயன் படுத்த அனைவருக்கும் வேண்டுகோள்.

14 Comments:

At 7:01 PM, said...

//பலரை போல், "யார் நீ" என்ற கேள்விக்கு பதில் தேடி கொண்டிருக்கும் "மனிதன்"
//
"யார் நான்"??

//புன்னகை ஒரு அருமையான ஆயுதம் அதை கொண்டு பல யுத்தங்களை வெல்ல முடியும். //
புன்னகைக்கிறோமோ இல்லையோ, இங்க சிரிப்பான் போடுறதுல எந்தக் குறைவும் இல்லையே!! சிரிப்பான் போடுறவங்க எத்தனை தடவை சிரிச்சிட்டுப் போடறாங்க என்பது தான் கேள்வியே!!

 
At 7:30 PM, said...

"யார் நீ" தாங்க சரி. என் மனசு என்ன பாத்து கேக்குது. இந்த ரெண்டாவது கேரக்டர் இருக்கறதுநால தான் சண்டை சச்சரவு கொஞ்சம் கம்மியா இருக்குனு நான் நினைக்கிறேன்.

//சிரிப்பான் போடுறவங்க எத்தனை தடவை சிரிச்சிட்டுப் போடறாங்க என்பது தான் கேள்வியே!! //

ஒரு பத்து நாள் புன்னகைய பயிற்சி பண்ணினா அப்புறம் அது தானா ஒட்டிக்கும் அத மாதிரி தான் சிரிப்பான் போட்டுக்கிட்டே இருந்தா நாளடைவில தானா வன்மம் காணாமல் போய்விடும்.

 
At 3:38 PM, said...

வாங்க நன்மனம். வலைப்பூவுல தொடர்ந்து கலக்குங்க.

எந்த விஷயத்தையும் இரண்டு விதங்களில் அணுகலாம். நல்வழி. தீவழி. நல்வழி கொஞ்சம் நேரமெடுத்தாலும் நல்ல விளைவைக் கொடுக்கும். தீவழி விரைவில் பலன் தந்தாலும் கெட்ட பலனைத்தான் கொடுக்கும். இன்னைக்கு நிலமையில் நல்வழியை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எல்லாருக்கும் இருக்கிறது. அனைவரும் முடிந்த வரை அதைப் பின்பற்றுவோம்.

 
At 3:56 PM, said...

நன்றி ராகவன்.

 
At 3:32 PM, said...

வாழ்த்துக்கள். தொடருங்கள்.

 
At 9:37 PM, said...

நன்றி சந்தரவதனா அவர்களே.

 
At 12:22 PM, said...

புன்னகை/சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் இந்நாளில், நீங்கள் நினைவு படுத்தியது சரியே!

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்களுடன்,

துபாய்வாசி

 
At 2:24 PM, said...

நன்றி, துபாய் வாசி அவர்களே.

 
At 8:31 PM, said...

நன்றாக உள்ளது.

 
At 10:09 PM, said...

நன்றி, திரு.மாசிலாமணி அவர்களே.

 
At 8:41 PM, said...

அட அடா, நன்மனம் பதிவுகள் போட ஆரம்பித்து வீட்டிர்க்களா.
சந்தோஷம் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
புன்னகை அருமையான ஆயுதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை உபயோகபடுத்த வேண்டிய இடத்தில் சரியாக உபயோக படுத்த தெரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

 
At 11:43 PM, said...

நன்றி திரு.நாகை சிவா அவர்களே.

 
At 2:29 PM, said...

வாங்கய்யா வருக வருக

 
At 2:48 PM, said...

நன்றி முத்து அவர்களே.

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4